
நாட்டில் சிற்றுண்டி உணவுகளின் விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தற்போது எரிவாயு கொள்கலனை 4 ஆயிரம், ஐயாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாவாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாவாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், வடையும், தேநீரும் சிற்றுணவகங்களின் பிரதான விற்பனைப் பொருட்களாக மாறியுள்ளன. அத்துடன், ரொட்டியும் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.