
கொழும்பு, மார்ச் 25
மே தின கூட்டத்தையும், பேரணியையும் கண்டியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆளுங்கட்சியின் மே தினக் கூட்டமும், பேரணியும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.