வீதியின் தரத்தை உறுதிப்படுத்துங்கள் – சாரதிகள் கோரிக்கை

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதான வீதி கல்லுண்டாய் பகுதியில் பாலம் ஊடாக கடக்கும் வீதியின் தரத்தை உறுதிப்படுமாறு சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை செல்வதற்கான குறித்த வீதி அண்மையில் அகலிக்கப்பட்டு காப்பெட் வீதியாக மாற்றப்பட்டது. சீரமைக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் வீதி ஊடான பாலத்தின் அருகே சில பழுதுகள் காணப்படுகிறது. போடப்பட்ட கொங்கிறீட் தடுப்பு வெடித்து காணப்படுவதுடன், இரும்புக் கம்பிகளும் வெளியே தெரிகிறது.

ஆகவே, இந்த வீதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *