
நாணய மாற்று வீதம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மே – ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க டொலர் 400 ரூபாவைத் தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
டொலர் கட்டுப்பாட்டை இழந்ததன் பின்னர் 300 ரூபாவாக இப்போது அதிகரித்துள்ளது.
இதனால் எதிர்வரும் காலங்களில் வாழ்க்கைச் செலவு தவிர்க்க முடியாத அளவுக்கு உயரும். ஜூன் மாதத்துக்குள் டொலர் 400 ரூபாவை எட்டும் என்பதே எனது கணிப்பாகும்.- என்றார்.