ரயில் கட்டண அதிகரிப்பு திடீரென இடைநிறுத்தம்!

நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு ஆசனக் கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்பட்டதால் கட்டண அதிகரிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மலையகம் மற்றும் வடமாகாணத்துக்கான நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான கட்டணங்கள் நேற்றுமுன்தினம் அதிகரிக்கப்பட்டன.

ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடத்திய பின்னர் திங்கள் அல்லது செவ்வாய்கிழமைக்குள் கட்டண விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு எவ்வித முன்னறிவித்தலும் இன்றித் திடீரென ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

நகர்விரைவு கடுகதி, நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட அதி விரைவு ரயில்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *