
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என்று சாரதிகள் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த இரு நாள்களாக மூடப்பட்டுள்ளது.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக செல்லும் ஊர்திகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.