அரசின் மோசமான செயற்பாட்டால், முதிலீடுளை செய்ய மறுக்கும் புலம்பெயர் சொந்தங்கள்

அரசின் மோசமான செயற்பாடு காரணமாகவே புலம்பெயர் சொந்தங்கள் இங்கே முதலீடுகளை இடுவதற்கு விரும்பவில்லை என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத சூழ்நிலையிலும் இந்நாட்டில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். இதற்கு அரசாங்கம் கோவிட் 19,முறையற்ற பொருளாதார கொள்கை போன்ற பல காரணங்களை முன்வைத்துள்ள போதிலும், தெளிவற்ற நிர்வாக அமைப்பே இதற்கு காரணமாக அமைகிறது.

புலம்பெயர் மக்கள் அனுப்புகின்ற அந்நியச்செலாவணியின் மூலம் பொருளாதார நெருக்கடியினை மிக இலகுவாக நீக்க முடியும் . என்றாலும் இந்நாட்டு அரசாங்கத்தின் மோசமான கொள்கைகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமை கோட்ப்பாட்டினை வழங்காமையினால் புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய மறுக்கின்றனர்.

மேலும் நாடு நாடாக கையேந்தாமல் இனவாதத்தினை நீக்கி புலம்பெயர் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படடால் இதற்கு ஒரு தீர்வினை பெறலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *