இருட்டில் தள்ளாடிய யாழ் மாநகர சபை – டீசல் இல்லாததால் நிறுத்தப்பட்ட சபை அமர்வு

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் மின்தடை காரணமாக, யாழ். மாநகர சபையின் அமர்வு, தடைப்பட்டதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தள்ளப்பட்டுள்ளார்.

பின்பு மின்பிறப்பாகியின் மூலம் மின்சாரத்தினை பெற்று சபை அமர்வை மேற்கொண்டோம். இடையில் டீசல் முடிவடைந்ததால், சபை ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் டீசல் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சபை நடாத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வருகினற திங்கட்கிழமை திறந்து வைப்பதாக கூறப்படட தகவல்கள் உறுதியாக இல்லை. ஆனாலும் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்படுகினறன.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் இந்தியா நோக்கி இடம்பெயர்வது தவிர்க்க முடியாத விடயம்.நாடு வருகின்ற காலங்களில் இன்னும் மோசமடைந்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *