மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்பொழுது மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் பற்றாக்குறையால் நாட்டின் முன்னணி மின் உற்பத்தி நிலையங்கள் தங்களது செயற்பாடுகளை நிறுத்தி வருகின்றன.

மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நீர் மின் உற்பத்தியிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல மணிநேரங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள வேண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *