இலங்கையில் விமான நிலையங்கள் பூட்டப்படும் நிலை – வெளியான பகீர் தகவல்

இலங்கையில் மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு, நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி தெரிவித்துள்ளார்.

எரிவாயுவை துறைமுகத்திலிருந்து எடுப்பதற்கு டொலர் இல்லை. எரிபொருட்களை பெற டொலர் இல்லை. அத்துடன் மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றை பெறுவதற்கும் டொலர் இல்லை. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையிலிருந்து விமான நிலையங்கள் சேவையை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அடிப்படை வாழ்வாதார விடங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.

ஆகவே வெளிநாட்டு பயணங்கள் கூட மட்டுப்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்போது எல்லா நிறுவனங்களும் டொலரில் தான் தமது கொடுப்பனவுகளை கோருகிறார்கள்.

மிக விரைவில் விமான நிலையங்கள் பூட்டப்பட்டு, துறைமுகங்கள் பூட்டப்பட்டு, நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *