
லண்டனிலிருந்து இலங்கை வந்த ஒருவர் இலங்கை உணவகத்தில் கொத்துரொட்டியும் தேநீரும் சாப்பிட்டதற்கு 1620 ரூபா செலுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் தனது இராப்போசனத்தை முடித்துள்ளார்.
அவர் சாப்பிட்ட கொத்து ரொட்டிக்கு ரூபா 1500 ம், தேநீருக்கு ரூபா120 செலுத்தியதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், இராபோசனத்திற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வளவு பணம் கொடுக்க வேண்டியுள்ளதா என தனது வியப்பை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டில் அண்மைகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.