முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க கைது

கொழும்பு,மார்ச் 26

முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று (25) அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *