அரிசி விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு!

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும், 3 ரூபாய் முதல் 13 ரூபாய்க்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள், 9 ரூபாய் முதல் 18 ரூபாய்க்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாய்யின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை மக்களுக்கு 2,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *