திங்கள் நாட்டை வந்தடையும் மற்றுமொரு எரிபொருள் கப்பல்

கொழும்பு, மார்ச் 26

37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து, 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை தரையிறக்கும் பணிகள் நேற்று (25) மாலை ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இன்றைய தினம் 3,650 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *