இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் !

இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

அவர் இந்த விஜயத்தின்போது, கொழும்பில் நடைபெறும் BIMSTEC மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *