யாழ்ப்பாணத்தில் விலையேற்றத்திற்கும் எதிரான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் !

<!–

யாழ்ப்பாணத்தில் விலையேற்றத்திற்கும் எதிரான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் ! – Athavan News

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது .

யாழ் . மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா ? அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய் ? தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டு ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது .

மேலும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *