நாட்டில் அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும், 3 ரூபாய் முதல் 13 ரூபாய்க்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.
அதேசமயம் , இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள், 9 ரூபாய் முதல் 18 ரூபாய்க்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.
நாட்டில் டொலருக்கு நிகரான ரூபாய்யின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , நெருக்கடி நிலையில் இலங்கை மக்களுக்கு 2,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
