
கொழும்பு, மார்ச் 26
கொழும்பு − தெமட்டகொட மேம்பாலத்தில் கார் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தீ விபத்து சற்று முன்னர் ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காரில் தீ பரவியுள்ளமையினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.