
வவுனியா தவசிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த நபர்களைக் கைது செய்ததோடு அவர்கள் கப் ரக வாகனம் மற்றும் 10 முதிரை மரக்குற்றிகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஓமந்தை, கூமாங்குளம், தோனிக்கல் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களாவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.