
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக சிறிலங்கா விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி உலங்குவானூர்தி அல்லது விமானங்கள் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் பயணங்களின் போது உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை வழங்கப்படும்.
முன்னர் சிறிலங்கா விமானப்படையால் அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்கள் வழங்கப்பட்டன- என்றார்.