
ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு போனால் அதற்கான முழுப் பொறுப்பையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்க வேண்டுமென பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனவின் பீடாதிபதி கலாநிதி.மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள மக்கள் விரும்பவில்லை, நாளை அவர் எமக்கு என்ன செய்வார் என்பது தெரியவில்லை. நான் சொல்லுவது கடுமையாக இருக்கலாம்.
மக்கள் இன்று நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பினை பஸில் ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.