
பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி”, “எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா”, “அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய்”, “தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர்” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.