
சீதாவக்க ஆற்றில் மூழ்கி இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை – தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாத்திரை குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்ட போதே இவ்விருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரிவித்தனர்.