
பசில் ராஜபக்சவை காலம் தாமதிக்காமல் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பசில் ராஜபக்சவை இனியும் தாமதிக்காமல் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும், நிதியமைச்சின் பணிகளை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முடிவை விரைவில் எடுக்காவிட்டால், அரசுக்கு எதிராக அனைத்து சங்கங்களும் ஒன்று திரண்டு வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.