சிறுவர்களின் உடல்நலம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் உடல்நலம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

விசேடமாக உடலில் கொப்புளங்கள் ஏற்படல், உடல் வலி, தலைவலி, உடற்சோர்வு, அதிக தாகம் போன்ற அறிகுறிகளை சிறுவர்களிடம் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு அதிக வெப்பமே காரணமாகும்.

இதன் காரணமாக சிறுவர்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டியது அவசியமாகும். அத்துடன் நீரிழப்புக்கு உள்ளாகும்போது சிறுவர்களை நீரில் அதிக நேரம் இருக்க செய்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *