மின் தடை சீராகும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்!

மின் தடை சீராகும்வரை உத்தேச மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தொடர்ந்தும் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சரவையினால் மின்சார சபையிடம் இருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கோரப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த யோசனை தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *