கிளிநொச்சியில் உள்ள 11 இந்துக் கோவில்களுக்கு 1.2 மில்லியன் நிதியுதவி

கிளிநொச்சியில் உள்ள 11 இந்துக் கோவில்களுக்கு 1.2 மில்லியன் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 01 ஆலயத்திற்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆலயங்களிற்கும் இவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் முயற்சியில் இந்து கலாச்சார அமைச்சின் நிதியிலிருந்து ஆலய அபிவிருத்திக்கான விசேட நிதி பெறப்பட்டு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நந்தகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *