மன்னாரில் மேலும் 95 பேருக்கு கொரோனா!

மன்னார் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது,  மன்னார் மாவட்டத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட  95 கொரோனா தொற்றாளர்களில், 84 பேர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 11 நாட்களில் 276 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 1,960 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 22 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *