மாலைத்தீவு பயணத்தின் எதிர்ப்பை சமாளிக்கவே நாமல் இராஜினாமா நாடகம்! ஹேஷா விதானகே

மாலைத்தீவுக்கு சென்று திரும்பியதால் நாட்டு மக்கள் எழுந்துள்ள எதிர்ப்பலையை கலைவதற்காகவே நாமல் ராஜபக்ஷ, இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் சந்தர்ப்பத்தில், அந்த நெருக்கடிகளை பொறுத்துக்கொண்டு நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு இல்லாது நாட்டுமக்கள் முரண்பாடுகளில் ஈடுபட நினைத்திருப்பார்களரியின் நாடு வேறு திசை நோக்கி பயணித்திருக்கும்.

நாட்டு மக்கள், நாட்டை நேசிப்பவர்கள் என்பதால் நாட்டின் நெருக்கடிகளை சமாளித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அவ்வாறு இருக்கும்போது சர்வகட்சி மாநாடு எனும் பேரில், தற்போது வீழ்ந்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் எழுவதற்கு முயற்சிக்கின்றனர் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *