கல்முனையில் வீட்டில் புகுந்து மயக்க மருந்து தெளித்து கொள்ளை : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனையில் வீட்டில் புகுந்து மயக்க மருந்து தெளித்து கொள்ளை : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை போன்ற காரணங்களால் அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பல பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று இரவு கல்முனையில் ஒரு வீட்டினுள் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.
மயக்கம் வருவதற்கான spray தெளிக்கப்பட்டு இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் வீட்டில் இருந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *