இலங்கையின் பொருளாதார சிக்கலுக்கு ராஜபக்ச குடும்பத்தின் அதிஉச்ச நிதி மோசடி காரணமா?

இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததற்குப் பின் எதிர் கொள்கின்ற மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியாக தற்போதைய இலங்கை நிலைவரம் காணப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் அத்தியவசிய பொருட்கள் குறிப்பாக உணவு மருத்துவம் மற்றும் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்கின்றது.

பரீட்சை அச்சேற்றக் கடதாசி பற்றாக்குறையினால் மில்லியன் கணக்கிலான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் தற்போதைய அரசு வெளிநாட்டு கடன்களில் மூழ்கி இருப்பதுடன் வெளிநாடுகள் எவற்றுடனும் எந்த வித கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் நிதி பிடியில் இருந்து பிணை எடுப்பதற்கு முயற்சித்து வருகின்றது.

கடன்களை மீள செலுத்த வேண்டிய காலப் பகுதி தாண்டியுள்ளதால் இலங்கை கடன்களை செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

பொதுவாக கடன் கொடுப்பவர் மற்றும் கடன் வேண்டுபவர் ஆகிய இருவருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

மேற்படி ஒப்பந்தத்தில் கடன் மீள செலுத்தப்படும் காலப் பகுதி திகதி என்பன குறிப்பிடப்படும்.

அக்காலப் பகுதி தவறும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் தழும்பல் நிலையை அடைந்து வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கும் இதுவே இலங்கையின் நிலை.

அண்மையில் இந்தியா இலங்கைக்கு 1பில்லியன் நிதி உதவியினை கடனாக கொடுத்திருந்தது.

இதனை இலங்கை உடனடி அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் மேற்படி இந்தியாவினால் வழங்கப்பட்ட கடன் இலங்கை எப்போது ஸ்திரமான பொருளாதார நிலையை அடைகின்றதோ அப்போது மீளச் செலுத்தினால் போதும் என்பதே ஒப்பந்தம்.

அடிப்படையில் இலங்கையின் GDP(gross domestric product) 110% ஆக அதிகரித்துள்ளமையினால் இலங்கை மிகப் பெரிய வெளிநாட்டு கடனில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பண வீக்கம் 15% அதிகரித்துள்ளதுடன் 2008ம் ஆண்டிற்குப் பின்னர் மிகப் பெரிய அதிகரிப்பாக இது காணப்படுகின்றது.

பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஒரே பண வீக்க சிக்கலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்யைில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 276.93 காணப்படுகின்ற அதேவேளை பாக்கிஸ்தானில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 180.38 ஆகவும், இந்தியாவில் 76 ரூபாயாக காணப்படுகின்றது.

இந்த டொலர் பெறுமதியானது பொருட்களின் இறக்குமதியில் அதிக தாக்கத்தை செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால் பொருட்களின் குறிப்பிட்ட விலையினை செலுத்துவதற்கு அதிகமான இலங்கை பணத்தினை கொடுக்க வேண்டி இருக்கும்.

அப்போது இலங்கையின் உள்ளூர் சந்தையின் நிலை பொருட்களை மேலும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

எனவே இலங்கையின் இறக்குமதி அதி உச்ச நிலைக்கு செல்லும். ஏற்றுமதியினை விட இறக்குதி அதிகரிக்குமாக இருந்தால் பொருளாதார தழும்பல் ஏற்படும்.

அத்துடன் நாட்டின் பொருளாதர சமநிலை அழிவடையத் தொடங்கும். எனவே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது என்பது எந்த நாட்டிற்கும் சிக்கலான விடயம் தான்.

தற்போதைய இலங்கை சூழலில் இலங்கையின் கடன் பெறுமதி உச்ச நிலையில் இருப்பதால் இங்கை யாரிடமும் கடன் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஆசிய வங்கி மற்றும் உலக வங்கிகளிடமிருந்து கூட கடன் பெற முடியாத நிலை இலங்கைக்கு உருவாகியுள்ளதுடன் இலங்கைக்கு தற்போது நிதி தேவை நிதியினை சேமித்து வைக்க வேண்டும்.

அத்துடன் வருகின்ற அண்மைய காலத்திற்கு எந்த கடன்களையும் இலங்கை மீள் செலுத்த முடியாது.

இலங்கைக்கு இந்தியா கொடுத்துள்ள கடன் தொகை போதாது எனவே இலங்கை் மேலும் நிதியினை சேகரிக்கும் முறைகள் குறித்து பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று கடன்களை மீள் திருத்தம் செய்ய வேண்டும் இரண்டாவது IMF இடம் சரணடைய வேண்டும் (சர்வதேச நிதி கண்ணிப்பு அமைப்பு).

இலங்கை மேற்குறிப்பிட்ட இரண்டு தெரிவுகளையும் நிராகரித்து சீனாவிடம் சென்றிருக்கின்றது. ஏன் இலங்கை IMF செல்லாமல் சீனாவிடம் கடனுக்காக சென்றிருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

IMF இடம் கடன் கேட்டு செல்லும் போது அவர்கள் சில நிபந்தனைகளை விதிப்பார்கள். IMF மேற்கு நாடுகளினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க ஒரு நிபந்தனையாக இருப்பது கடன் பெறும் நாட்டின் அரசவையில் IMF தலையிடும் என்பதாகும். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போதைய அதிபர் ராஜபக்ச குடும்ப அரசியல் காரணம் என கூறப்படுகின்றது.

ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் அவரது குடும்பம் அதி உச்ச நலன்களை அனுபவிக்கத் தொடங்கியமை தற்போதய நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாற்று.

இதே நிலை பாக்கிஸ்தானிலும் நடைபெற்றது 2016ல் பாக்கிஸ்தானில் பல இராணுவ தளபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிதி மோசடிகளில் ஈடுபட்டனர்.

அதன் விளைவு பாக்கிஸ்தான் உடனடியாக சீனாவிடம் சரணடைந்தது. இன்று சீனாவிடம் சரணடைந்த இரண்டு நாடுகள் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் படு வீழ்ச்சியில் காணப்படுகின்றது. இலங்கையின்பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களாக

  1. மிக மோசமான வெளிநாட்டு கடன் 2010 இருந்து.
  2. அளவிற்கு அதிகமான மற்றும் ஏற்றுமதியிலும் குறைவான இறக்குமதி.
  3. கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிப்பு.
  4. ராஜபக்ச அரச குடும்பத்தின் அதி உச்ச நிதி மோசடி
  5. அரசினால் தடை செய்யப்பட்ட விவசாய உற்பத்தி மற்றும் உரவகைகள்.

எனவே இலங்கை அரசு நிலைமையை உணர்ந்து மனசாட்சியின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்டால் நாடு பாதுகாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *