
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்றைய தினமும் (28) சுழற்சிமுறையில் இரு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட உள்ளது.
இன்றயை தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு
இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு
காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,
மாலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.