இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பம்

கொழும்பு, மார்ச் 28: இரத்மலானை விமான நிலையத்தினூடாக சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் மீளவும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

00

இந்த நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, விமான போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் டி.வி.சானக ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக பிரசன்ன ரணதுங்க கூறுகையில் “இரத்மலானை விமான நிலையத்தின் திறன், ஓடுபாதை செயற்திறன் ஆகியன சுமார் 75 சதவீதம் அதிகரிக்கும். இவ்விமான நிலையத்தில் புதிய விமானக் கட்டுப்பாட்டு மையம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் என்பவற்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம்; என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *