கைதிகளின் விடுதலையை வேண்டி உறவினர்கள் பிரார்த்தனை

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வில் சிறைக்கைதிகளை போன்று வடிவில் அமைத்து காட்சிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.

அதில் சிறைக்கைதிகளின் உறவினர்கள் சிலர் கலந்து கொண்டு அதற்கு தீபம் ஏற்றியதோடு அவர்களது உறவினர்களின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *