
கொழும்பு, மார்ச் 28
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போசாக்கு உணவை பாடசாலைகளுக்கு விநியோகித்து வரும் சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சமுர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்களுக்கு உணவு பொதியொன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் வாராந்தம் இரண்டு தடவைகள் முட்டை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து நாட்களிலும் ஏதேனும் பழ வகையும் கட்டாயம் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.