
அளுத்கம – பெந்தோட்டை – பேருவளை சுற்றுலா வர்த்தக ஸ்தாபனங்களின் அனைத்து வியாபார நடவடிக்கைகளுக்கும் இயங்குவதற்குத் தேவையான டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படாமையால் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர் மின்வெட்டு காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியில் கனரக வாகனத்தில் மின் பிறப்பாக்கியை(ஜெனரேற்றர்) ஏற்றி அளுத்கம லங்கா ஐஓசி நிரப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்று, அந்த வாகனத்தில் உள்ள மின் பிறப்பாக்கியின் தொட்டியில் தேவையான டீசல் நிரப்பப்படுவதைக் காட்டுகிறது.
இந்த மின் பிறப்பாக்கிக்கு 70 ரூபா ஆயிரம் செலவில் டீசல் நிரப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டது.