அத்தியாவசியமற்ற விமான வசதிகள் நிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடடார்.

எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய தேவைக்காக ,பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள எண்ணெய் கையிருப்பு , அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்த்துவம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *