நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் வாழ்வில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் புதியநகர் கிராமத்தில் தற்காலிக வீட்டில் ஆறு அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்தில் வாழ்கின்ற நாளாந்தம் மேசன் தொழிலில் ஈடுபடும் ஒரு குடும்பத்தின் அவல நிலையே இது,
மாதத்தில் இருபது நாட்கள் மாத்திரமே வேலை கிடைக்கும் நிலையில் நாளைக்கு ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் இந்த குடும்பம் ஒரு நாளைக்கு சுமார் 3000 ரூபா உணவு மற்றும் மாணவர்களின் படிப்பு செலவுக்கு தேவையாக உள்ளதாக இந்த தந்தை கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விலைவாசிகளின் மத்தியில் ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தை பெற்று 3000 ரூபா செலவு செய்வதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிரந்தர வீடும் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விலைவாசிகளுக்கு ஏற்ப பல்வேறு குடும்பங்கள் இவ்வாறான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

