
கொழும்பு நகரில் உணவு மற்றும் பானங்கள் மீதான பரிசோதனை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இதற்காக 49 பொதுப் பரிசோதகர்கள் மற்றும் 6 வைத்திய அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக உணவுச் சட்டத்தின் கீழ் கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் .
பொதியிடப்பட்ட உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்யும் போது காலாவதியான, தரமற்ற மற்றும் மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்பவை குறித்து லேபிளில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை மருத்துவர் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு மசாலாப் பொருட்கள் சந்தையில் கிடைக்கக்கூடும் என்பதால், அவற்றை வாங்கும் போது நிறம் மற்றும் மணத்தில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.