மன்னார் உப்புக்குளம் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத (மோனோபிலமென்ட்) மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரையும் சுற்றிவளைப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்த கடற்படை அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அனுமதியற்ற மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் – இருக்குளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் அனுமதியற்ற மீன்பிடி வலைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


