வவுனியா பப்பாசி தோட்டத்திற்குள் உயிரிழந்த யானைக்குட்டி

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பப்பாசி தோட்டத்திற்குள் வாய்ப்பகுதியில் காயங்களுடன் காணப்பட்ட யானைக்குட்டி உயிரிழந்துள்ளது.

நேற்று (28) ஞாயிற்றுக்கழமை குறித்த தோட்டத்திற்குள் நுழைந்த 6 வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி உணவருந்த முடியாத நிலையிலும், தோட்டத்திலிருந்து செல்ல முடியாத நிலையிலும் காணப்பட்டது.

இதேவேளை யானையினை பார்வையிட சென்ற மக்களை துரத்தி அச்சமடைய வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரதேச வாசிகளால் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

குறித்த திணைக்களத்தினரால் வடமாகாண கால்நடை மருத்துவர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடமாகாண மருத்துவர் கிரிதரன் தலைமையிலான குழுவினர் வெங்காய வெடியினை உட்கொண்டதனாலையே யானை குட்டி உணவருந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.

எனினும் குறித்த யானைக்குட்டி சிகிச்சை பலனின்றி இன்று (28) காலை உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *