தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சாவகச்சேரி பிரதேச சபையில், உறுப்பினர் வை.ஜெகதாஸால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரரேரணை சபையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே உரிய தரப்பினர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை பிணையிலோ அல்லது விடுதலை செய்யுமாறு தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *