
எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை, பலடுவ பௌத்த விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்க வழி உள்ளது. அதனை தவிர நாடாளுமன்றத்தை எவராலும் கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.