இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தகவல்!

இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்காகவே இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஜனவரியில் இருந்து இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இதனால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்குகட்டணம் செலுத்துவதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னதாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 17ஆம் திகதி புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டது.

உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *