
சித்தரைப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பிரதான பேருந்து நிலையத்துக்கு மேலதிகமாக கடவத்தை, கடுவலை மற்றும் மாகும்புர உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்தும் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விடயம் தொடர்பான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களின் கீழ் இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இரண்டாவது கட்டத்தின் கீழ் பயணிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மீள கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு திரும்புவதற்கும் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.