“Excellence in Planning” விருதை வென்ற கனோபஸ் நிறுவனம்

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் வழிகாட்டலில், கனோபஸ் நிறுவனத்தால் திட்டமிடப்படும் தூய நகரம், தூய கரங்கள் இலக்கினை நோக்கிய திட்டமிடல் செயற்திட்டங்கள், இலங்கையின் பௌதீக திட்டமிடல் துறையின் உயர்ந்த விருதான “Excellence in Planning” என்ற விருதினை வென்றுள்ளது.

குறித்த விருது, நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவு பொருள் வெளியேற்றம் மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் நாலக்க கொடகேவவால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கனோபஸ் நிர்வாக முகாமைத்துவ பணிப்பாளர், திட்டமிடலாளர் துளசிவர்மனும் Emerging Planner விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *