மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களை மீறி செயற்படுவோருக்கு எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாணய மாற்று விகிதங்களை மீறி நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாணய மாற்றாளர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு புறம்பாக நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்துக்கமைய தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *