எரிபொருள் வரிசையில் நின்று மரணமடைந்த மற்றுமொரு சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி அத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை நிரப்புவதற்காக வந்திருந்த 85 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச் சேர்ந்த எம். ஜினதாச பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் எரிபொருள் எரிபொருள் நிரப்ப வந்த குறித்த நபர், எரிபொருளை பெறும் வரிசையில் மூன்றாவதாக நின்றிருந்த வேளையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவர் இருதய பிரச்சினை கொண்டவர் எனவும், அவர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
