
புத்தளம் பகுதியில் இன்று மாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைக்கிடையே இடியுடன் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்த போது, புத்தளம் கல்லடி பகுதியிலுள்ள பாரிய மின் பிறப்பாக்கி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி பழுதடைந்துள்ளதனாலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் அலுவலத்தின் கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால், மதுரங்குளி , பாலாவி மறரறும் தில்லையடி பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
எனினும் பழுதடைந்துள்ள மின் பிறப்பாக்கியை திருத்தம் செய்ய பொறியியல் குழுவொன்று பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.