நேரம்…

நேரம் அதிகரிப்பு: 300W மின்சாரத்தை உற்பத்திக்கு அவசியமான எரிபொருள் பற்றாக்குறைநாளையதினம் (29) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனல் மின்நிலையம் மூலம் 300W மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அவசியமான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, மின்வெட்டு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய நாளை (29) மின்வெட்டு:A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்: – மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 5 மணித்தியாலங்கள் – பி.ப. 6.00 – இரவு 11.00 வரை 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள்P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 7 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்: – மு.ப. 8.30 – பி.ப. 6.30 வரை 5 மணித்தியாலங்கள் – பி.ப. 6.30 – இரவு 11.00 வரை 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள்மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *